Sunday, August 14, 2022

அசோகரின் கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு

 அசோகரின் கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அசோகரது கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு குஜராத் மாநிலம் கத்தியவாரில் கிடைக்கப்பெற்ற முக்கியமான ஒரு கல்வெட்டாகும்.

அரசன் : அசோகன்
வம்சம் : மௌரியர்
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
மொழி : பிராகிருதம்
எழுத்து : அசோகன் பிராமி
நோக்கீடு : Inscriptions of Asoka by D.C. Sircar, 1957, Corpus Inscriptionum Indicarum
அசோகர் கல்வெட்டு பாடம் (தமிழில்)

1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

செய்தி :

அசோகர் வழக்கம்போல் இக்கல்வெட்டிலும் தேவனுக்குப் பிரியமானவன் என கவுதம் குறிப்பிடப்பெறுகின்றார். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான சேர, சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், யோன அரசரான அன்டியோகஸ் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும் பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் பரிபோக்யமாக, சுபமாக வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

முக்கியத்துவம் :

இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்சம்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் (பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் வாழ்ந்தது விளங்கும்.
தமிழக வரலாற்றை குறிப்பாக சங்க காலத்தை பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கி கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துக்களைத் தவறானவை என இக்கல்வெட்டு கொண்டு மெய்ப்பிக்கலாம்.
தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவு.
அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

குஜராத்-கத்தியவார்-கிர்னார்

குஜராத் மாநிலத்தின் கத்தியவார் பகுதியைச் சேர்ந்த கிர்னார் (GIRNAR) என்னும் ஊரில் அமைந்துள்ள பாறைக்கல்வெட்டு அசோகனின் பாறைக்கல்வெட்டுகளில் இரண்டாவதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாறைக்கல்வெட்டின் பாடம் (வாசகம்), ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), கிர்னார் (GIRNAR), தவுலி (DHAULI), ஜவுகதா (JAUGADA)  ஆகிய ஐந்து இடங்களிலும் ஒன்றுபோல் பொறிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு சொற்கள் மாறுபடுகின்றன. 

அசோகரின் கிர்னார் பாறைக்கல்வெட்டு

                          

அசோகரின் கிர்னார் பாறைக்கல்வெட்டு - பாடம்

கல்வெட்டின்  முதன்மைச் செய்தி


மனிதருக்கும், விலங்கினங்களுக்கும் ஒன்றுபோல் மருத்துவ உதவி அளிக்கப்படவேண்டும் என்னும் அசோகனின் முதன்மை நோக்கத்தைக் கல்வெட்டு இயம்புகிறது. எனவே, ஆதுல சாலைகள் அமைப்பதற்கான அசோகனின் ஆணை என்றே இதைக் கொள்ளலாம்.  அதற்கான மருந்துச் செடிகள் (மூலிகைச் செடிகள்), மூலங்கள் (ROOTS), பழமரங்கள் ஆகியன மருத்துவ உதவி அளிக்கப்படும் இடங்களில் அமையவேண்டும்; அவ்வாறு இவை அவ்விடங்களில் இல்லாத போது, அவை வேறிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுப் பயிரிடப்படல் வேண்டும். பெருவழிகளில், மனிதர்க்கும் விலங்கினங்களுக்கும் பயன் தருகின்ற வகையில் மரங்கள் நடப்படுதல் வேண்டும்; மேலும், அப்பெருவழிகளில் மனிதர்க்கும் விலங்குகளுக்கும் பயன்படுகின்ற கூவல்கள் (கிணறுகள்) தோண்டப்படுதல் வேண்டும். இந்த ஆணையைத் தெரிவிக்கும் அசோக மன்னன் பியதசி” என அழைக்கப்படுகிறான். அவன் கடவுளின் அன்பைப் பெற்றவன். 


எங்கெல்லாம் மருத்துவச் சாலைகள்?


அசோகன் வென்றுகொண்ட நாட்டுப்பரப்புகளிலெல்லாம் இந்த மருத்துவ உதவி அமையவேண்டும் என்று கல்வெட்டு கூறுவதோடு வேறு சில நாட்டுப் பகுதிகளிலும் இம்மருத்துவ அமைப்பு செயல்படவேண்டும் என்று கூறும் வகையான் சங்ககாலத்தமிழ் மன்னர்களின் பெயர்கள், இலங்கையின் நாட்டுப் பெயர், யவன அரசன் அந்தியாகோவின் பெயர் ஆகியன இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. இக்குறிப்பில், சோடா, பாண்டா, சதியபுத, கேதலபுத ஆகியோர் காணப்படுகின்றனர்.


கல்வெட்டில் காணப்பெறும் பிற அரசர்கள்-

சோடா, பாண்டா, சதிய புத, கேதல புத


இக்கல்வெட்டினை, பிரின்செப் (PRINSEP), வில்சன்  (WILSON) என்னும் மேலை நாட்டு அறிஞர் இருவர் படித்துப் பொருள் அறிந்துள்ளனர். அவர்களுள் பிரின்செப் என்பார், அசோகனின் மேற்படி அரசாணை அறிவிப்பானது அசோகன் வென்ற நாட்டுப் பரப்பு அனைத்திலும் (CONQUERED PROVINCE) மற்றும் நம்பிக்கைக்குரிய  (FAITHFUL) அரசர்களின் ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது என்பதாகக் குறிப்பிடுகிறார். நம்பிக்கைக்குரிய அரசர் வரிசையில் மேற்படி சோடா, பாண்டா, சதியபுத, கேதலபுத மற்றும் தொலைவில் இருக்கும் தாம்பபண்ணி (THANBAPANNI) என்னும் இலங்கை  (பிரின்செப், CEYLON  என்று குறிப்பிடுகிறார்) ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும், ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS)  என்னும் கிரேக்க அரசனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியும் குறிப்பிடப்படுகிறது.


            (மூன்றாம் வரியில்)-கிரேக்க அரசன் ஆண்டியோக்கஸ் பெயர்


                                       அ    ந்       தி           ய         கோ

  குறிப்பு :       ”ந்”   எழுத்து,  எழுத்து வடிவில் அல்லாது   ”அனுஸ்வாரம்”                                             என்னும் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.


              (இரண்டாம் வரியில்)     தமிழ் மன்னர்களின் பெயர்கள்


       சோ டா       பா   ண்டா ஸ    தி        ய           பு      தோ        கே    த      ல     பு     தா


இப்பெயர்களின் சரியான பாடம்  சோழா, பாண்டியா, சதியபுத்ர, கேதலபுத்ர ஆகிய அரசர் என்றும், தாம்பபனி நாடு என்றும் கன்னிங்காம் (CUNNINGHAM) குறிப்பிடுகிறார். இவ்வரசர்கள், அசோகனின் ஆட்சி எல்லையில் அமைந்த நாடுகளின் தலைவர்கள் என்பதும் அவர் தருகின்ற குறிப்பு.  முதலிரண்டு பெயர்கள், இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்த ஆட்சிப்பகுதிகள். தாம்பபனி என்பது சிலோன்’ தீவு; கிரேக்கர் இதைத் தாப்ரொபனே’  (TAPROBANE) என்று அழைப்பர். கேதலபுத்ர என்பது மேலைக்கடற்கரையின் கேரளாவைக் குறிக்கும். சதியபுத்ர என்னும் பெயர் யாரைக் குறிக்கும் என்பது உறுதியாகவில்லை.  ஆனால், லாசன் (LAASSEN) என்பார் சதியபுத்ர என்னும் பெயர் பிடா/பிதா (PIDA) எனப்படும் பாண்டியனின் பௌத்தப்பெயராகும் எனக்கருதுகிறார். கோதாவரி ஆற்றுப்பகுதியில் அமைந்திருந்த பைத்தான் (BAITHANA or PAITHAN)  பகுதிக்கு மேற்குக் கரையில் இருந்த சாதினி (SADINI) என்பவரைக் குறிக்கும் என்பது கன்னிங்காம் (CUNNINGHAM) அவர்களின் கருத்தாக உள்ளது. இதற்குச் சான்றாக அவர் சுட்டுவது தாலமியின் வரைபடமாகும் (PTOLEMY’s MAP) .  இவர்கள் கடற்கொள்ளையர் என்னும் கருத்தும் உள்ளது. கோதாவரிப்பகுதியில் வழங்கும் ஆந்த்ரி பைரேட்டி (ANDRI PIRATAE) என்னும் பெயரையும் நோக்குகையில், சாதினி (SADINI), சாதவாகனர் (SADAVAHANS), சாதகர்னி (SATAKARNIS) ஆகிய மூன்று பெயர்களும் ஆந்த்ரி (ஆந்திரர்) என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் எனலாம். அசோகன் காலத்தில் ஆந்திரர் ஒரு வலுவான நாட்டை ஆண்டவர்கள் என்பதைக் கன்னிங்காம், தாம் படித்த ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI) கல்வெட்டுகள் (அசோகனின் 13-ஆம் பாறைக் கல்வெட்டு) வாயிலாக நிறுவியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். நாசிக் கல்வெட்டு ஒன்றில், சாதகர்னி என்பது சாதவாகன என்று எழுதப்பட்டுள்ளது.  சாதகர்னி என்பதே தாலமியின் நூலில் சாதனி என மருவி வந்துள்ளது. பெரிப்ளூஸ்’  (PERIPLUS) நூலில் காணப்படும் சரகனோஸ்’ (SARAGANOS)  என்னும் சொல் சாதவாகனரையே குறிக்கும்.


சதியபுத -  அதியமான்


சதியபுத என்பது மேற்குறித்தவரையெல்லாம் சுட்டாது என்பதும், அதியமான் என்னும் குறுநில மன்னனையே குறிக்கும் என்பதும் பின்னாளில் நிறுவப்பட்டுள்ளது. அதிய” என்னும் தமிழ்ச் சொல் வட இந்தியச் சாயல் பெறும்போது “சதிய” என மாற்றம் பெறுவது இயல்பு. அதியமான், தொண்டைமான், மலையமான் போன்ற தமிழ்ச் சொற்களில் காணப்பெறும் மான்” என்னும் சொல் “மகன்” என்னும் பொருள் ஏற்றுப் பிராகிருத மொழியில் “புத” என்று வழங்கியிருத்தல் வேண்டும். இச்சொல் சமற்கிருத வடிவம் பெறும்போது “புத்ர” என அமையும். பிராகிருதச் சொல்லான “தம்ம” என்பது சமற்கிருதத்தில் “தர்ம” என அமைவதை ஒப்பிடுக. சமண->ஸ்ரமண, சுத்த->சூத்ர ஆகிய சொற்களையும் இவ்வகையில் ஒப்பீடு செய்யலாம். விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் அமைந்த குகைத்தளத்தில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று அதியமானைப் பற்றியதாகும். 1987-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பயிற்சி மாணவரான  கே.செல்வராஜ், தனது கள ஆய்வின்போது இக்கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அப்போதைய துறை இயக்குநர் இரா. நாகசாமியால் இது படிக்கப்பட்டுத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படத்துடன் கட்டுரையாக நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த அரிய கல்வெட்டு இது. வரலாற்றை வரையறை செய்யத் துணை நின்ற சிறப்புடைய கல்வெட்டு இந்த ஜம்பைக்கல்வெட்டாகும்.  



ஜம்பை-அதியமான் கல்வெட்டு

கல்வெட்டுப்பாடம்



சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி



   ஸதிய புதோ -  ஜம்பைக்கல்வெட்டில்

                

               





         





 ஸதிய புதோ -  கிர்னார்   கல்வெட்டில்    








அசோகனின் கல்வெட்டில் இடம்பெறும் சதியபுத என்பது மேற்படி ஜம்பைக் கல்வெட்டில் சதியபுத’ அடைமொழியோடு கூறப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சியையே குறிக்கிறது என்னும் செய்தி நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியருக்கு இணையாக ஒரு குறுநில மன்னனான அதியனும் அசோகன் போன்றதொரு பேரரசனால் சுட்டப்பெறுகிறான் என்பது அதியனின் சிறப்பு நிலையைக் காட்டுகிறது.


கல்வெட்டில் வரும் பாண்ட என்னும் சொல்லை வில்சன்  (WILSON), பலய (பழய?) என்று படித்துள்ளார். ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் பெயர் யோன என்கிற யவன ராஜா என்று குறிக்கிறார். கல்வெட்டிலும் “அந்தியகோ (நாம) யோன ராஜயே”  என்னும் தொடர் உள்ளது.  இந்திய நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டிய, அதிய அரசரை அசோகன் சுட்டுவது எதற்காக? தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாட்டுப்பரப்பு மட்டுமல்லாது தன் எல்லையில் தனியாட்சியில் இருக்கும் இந்தத் தமிழரசர் நாட்டிலும் மருத்துவம் சார்ந்த பணிகள் நடக்க வேண்டும் என்று அசோகன் விழைந்தான் என்று கொள்ளலாமா? அவ்வாறெனில், அசோகன் தமிழரசர்களோடு ஒரு பிணைப்பை ஏதோ ஒரு வகையில் கொண்டிருந்தான் எனக் கொள்ளலாம்.  அந்தத் தொடர்பு, அவன் அனுப்பிய தூது வழி ஏற்பட்டிருக்கக் கூடும். இத்தொடர்புக்கான சான்றுகள் எங்கேயும் கிடைத்துள்ளனவா? தெரியவில்லை.


ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) - கிரேக்க அரசன்


அசோகனின் கல்வெட்டில் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் கிரேக்க அரசனின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன? அசோகனின் மருத்துவம், மரம் நடுதல் ஆகிய பணிகள் எவ்வாறு கிரேக்க நாட்டுப்பகுதியோடு தொடர்புள்ளவை? இக்கேள்விகளுக்கு, கல்வெட்டில் இடம்பெறும் சில சொற்றொடர்களிலிருந்து விளக்கம் பெறுகிறோம். அசோகனின் ஆட்சிக்காலம் கி.மு. 268 – கி.மு. 232.  இக்காலத்தில் இருந்த கிரேக்க அரசன் இரண்டாம் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) ஆவான். (கி.மு.261-கி.மு.246) இவனது ஆட்சிக்காலத்தில் கிரேக்க ஆட்சியின் ஒரு பகுதியாக கிரீக்கோ பாக்ட்ரியா’ (GRECO BACTRIA) என்னும் நாட்டுப்பகுதி விளங்கியது என அறிகிறோம். இப்பகுதியை  இரண்டாம் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) சார்பில் அவனுடைய சாமந்தர்கள் ஆட்சி செய்தனர் என அறிகிறோம். இந்த சாமந்தரின் ஆளுகையில் இருந்த கிரீக்கோ பாக்ட்ரியா’ (GRECO BACTRIA) தற்போதைய வடக்கு ஆப்கானிஸ்தான் ஆகும். இது அசோகனின் ஆட்சிப்பகுதியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளதால் கல்வெட்டில் இந்தப் பகுதியையும் அசோகன் சேர்த்திருக்கிறான் எனலாம். அசோகன் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் கிரேக்க அரசனுடன் உறவு/தொடர்பு கொண்டிருந்தான் என்னும் கருத்து காணப்படுகிறது.  இதற்குச் சான்றாகக் கல்வெட்டில் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) பெயரும் தொடர்ந்து இப்பெயரோடு சாமந்தர் அரசர் பற்றியும் குறிப்பிட்டுள்ளதைக் கொள்ளலாம்.




ஆண்ட்டியோக்கஸ் உருவம் பொறித்த நாணயம்



கல்வெட்டு வரிகள்:


அந்தியகோ (நாம) யோன ராஜயே வாபித ஸ  அந்தியக ஸ சாமினம் ராஜனோ சவத


இவ்வரிகளில் உள்ள ” அந்தியக ஸ ஸாமினம் ராஜ” என்னும் தொடர் சாமந்தரின் ஆட்சியைக் குறிக்கிறது எனலாம். ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), ஜவுகதா (JAUGADA) ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுப் பொறிப்புகளில் ‘சாமந்த’  என்னும் சொல்லே எழுதப்பட்டுள்ளமை உன்னுதற்குரியது.


தம்பபண்ணி


அடுத்து, ”தம்பபண்ணி”  என்னும் சொல் இலங்கையைக் குறிக்கிறது என்று கன்னிங்காம் (CUNNINGHAM) சுட்டுகிறார்.  தம்பபண்ணி அல்லது தாம்பபண்ணி என்னும் சொல் தாமிரவர்ணி என்னும் சொல்லின் பாலி வடிவமாகும். தாம்ரபர்ணி, தாம்பபண்ணி எனத் திரிந்தது. தாமிரம் அல்லது செம்புக் கனிமத்தின் நிறத்தைக் குறிக்கும் இச்சொல், பழங்கால இலங்கையில் அமைந்த முதல் அரசைக்குறிக்கும். ராஜரதா அரசு என்னும் பெயரும் இதற்கிருந்தது. இவ்வரசின் தலை நகரின் பெயரும் தாம்ரபர்ணியாகும். இவ்வரசின் அரசன் விஜயன் என்பானின் ஆட்சிக்காலம் கி.மு. 543 – கி.மு. 505 என்றும், ஓர் அரசன், ஓர் அரசு என்பதோடு இவ்வரசு முடிந்தது எனவும் ஒரு வரலாற்றுக் குறிப்புள்ளது.


கல்வெட்டில் காணப்பெறும் சில பிராகிருதச் சொற்கள்


விஜிதம் -   அசோகன் வெற்றி கொண்ட பரப்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பிரின்செப் CONQUERED PROVINCE எனப் பொருள்கொள்ள இச்சொல்லையே அடிப்படையாகக் கையாண்டிருக்கலாம். ஆனால், அவர் குறிப்பிடும் FAITHFUL என்னும் சொல்லுக்கு நேரான பிராகிருதச் சொல் எது எனத் தெரியவில்லை. அதுபோலவே அவர் ‘countries bordering on the dominions of Asoka’  என்று தமிழகத்தைச் சுட்டுகின்ற பொருளுக்குரிய பிராகிருதச் சொல் கல்வெட்டில் எது எனவும் தெரியவில்லை.


சோடா -  சோழா என்பதன் வடமொழிச் சாயல். சிறப்பு ‘ழகரம் வடவர் ஒலியில் ‘ட’  என ஒலிப்பதுண்டு. இச்சொல் அனைத்துக் கல்வெட்டுகளிலும் ‘சோடா’ என்றே பொறிக்கப்பட்டுள்ளது.


பாண்டா -   பாண்டா என்பது பாண்டியரைக் குறிப்பதாகப் பிரின்செப் எழுதுகிறார். இரண்டாம் பாறைக்கல்வெட்டின் பாடம் (வாசகம்), ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), கிர்னார் (GIRNAR), தவுலி (DHAULI), ஜவுகதா (JAUGADA)  ஆகிய ஐந்து இடங்களிலும் ஒன்றுபோல் பொறிக்கப்பட்டுள்ளது; சிறு சிறு சொற்கள் மாறுபடுகின்றன என முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பாண்டா அல்லது பாண்ட என்னும் சொல் அவ்வகையானது. கிர்னார் கல்வெட்டில் ‘பாண்டா’ என்று எழுதப்பட்டிருப்பினும் தவுலியைத் தவிர்த்து மற்ற மூன்று இடங்களில் ‘பாண்டிய’  என்றே எழுதப்பட்டுள்ளது. 


கேதலபுத -  சேர அரசரைக்குறிக்கும் இச்சொல் அனைத்துக் கல்வெட்டுகளிலும் ஒன்றுபோலவே பொறிக்கப்பட்டுள்ளது. கேரளபுத என்பதன் மருவிய வடிவமே கேதலபுத.


சதியபுதோ -  ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI) கல்வெட்டில் மட்டும் ஸதியபுத்ர’  என எழுதப்பட்டுள்ளது. மற்றவற்றில் சதியபுதோ.


தம்பபண்ணி -  இச்சொல் ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI) கல்வெட்டில் தம்பபனி எனவும், கால்சி (KHALSI) கல்வெட்டில் தம்பபன்னி’ எனவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கிர்னார் (GIRNAR) கல்வெட்டில், தம்பபண்ணி என ‘டண்ணகரத்தில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இச்சொல்லின் ‘பண்ணி’  என்னும் எழுத்துச் சேர்க்கை,  ப + அனுஸ்வாரம் + ணி என்னும் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.  அனுஸ்வாரம் என்பது எழுத்தல்ல. வடமொழி எழுத்துகளில் ‘டகர வர்க்க எழுத்துகளில் இரண்டாவதான ‘ட’  எழுத்தின் சிறிய வடிவமே அனுஸ்வாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ‘டகரம் ஒரு பெரிய வடிவ வட்டம் என்றால், அனுஸ்வாரம் என்பது ஒரு சிறிய வடிவ வட்டமாகும். ஓர் எழுத்தின் முன்னொட்டாக அது எழுதப்பெறும்போது அவ்வெழுத்தின் இரட்டிப்பாகவோ, அல்லது மெல்லோசையாகவோ ஒலிக்கும். அவ்வாறே, ப + அனுஸ்வாரம் + ணி” என்பது “பண்ணி”  என அமைந்தது. தமிழில் க-ங,  ச-ஞ, ட-ண த-ந ஆகிய இசைவெழுத்துகளைப் போல அனுஸ்வாரம் பயன்படுகிறது எனவும் கூறலாம். எடுத்துக்காட்டாக “ச + அனுஸ்வாரம் + கு”   என்பது சங்கு”  என அமையும்.


த்வெ -  இரண்டு என்னும் பொருளுடைய சொல்; இரண்டு வகையான மருத்துவம் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவது. மனிதர்க்கும், விலங்குகளுக்கும் ஆனது.


சிகீச்ச -   நாம் தற்போது தமிழிலும் பரவலாகப் பயன்படுத்தும் ‘சிகிச்சை’ என்னும் வடசொல்.


மநுஸ -  மனித(ன்)  என்பதன் மாற்று வடிவம்.  மனுசன் என்று நாட்டுப்புறங்களிலும் வழங்கும் எளிய சொல்.


பஸு -  பசு என நாம் வழங்கும் மற்றோர் எளிய சொல்.  ஆனால், விலங்கு என்னும் பொருளுடையது. முனைவர் பவானி அவர்கள் தம் கட்டுரையில் பஸீ”  என எழுதியுள்ளார்.


ஒஸுதாநி -  ஔஷத என்னும் வடசொல்லின் பிராகிருத வடிவமாகலாம். முனைவர் பவானி அவர்கள் தம் கட்டுரையில் “ஔஸீதானி”  என எழுதியுள்ளார். அசோகன் பிராமியில் ‘ஔ’ எழுத்து இல்லை எனத்தோன்றுகிறது. உறுதி செய்யவேண்டும்.


மூலாநி -  மூலம் – நிலத்தடியில் இருக்கும் வேர் அல்லது கிழங்கைக் குறிக்கும் சொல்.  இங்கே மருத்துவ வேரைக் குறிக்கிறது எனலாம்; பிரின்செப் அவர்களும் ‘ROOTS’ என்றே குறிப்பிடுகிறார்.


கூபா -   பிரின்செப் ‘WELL’ -  கிணறு எனக்குறிக்கிறார்.  கூவல் என்பது தமிழிலும் கிணற்றைக் குறிக்கும் ஒரு சொல் என்பது கருதுவதற்குரியது.  (கொங்கு நாட்டில் காஞ்சிக்கோவில் என்றோர் ஊர் உள்ளது.  இப்பெயர் ‘காஞ்சிக்கூவல்’  எனபதன் திரிபாகலாமோ என்னும் ஐயம் எழுகிறது.)


யோன ராஜா -   யோன என்பது ‘யவன’  என்பதன் இன்னொரு வடிவம். கிரேக்க, ரோம நாட்டாரை ‘யவனர்’ என்று பழங்காலத்தில் தமிழர் அழைத்தனர். சங்ககால  நூல்களில் ‘யவனர்’ பற்றிய குறிப்புகள் உள்ளன.



அசோகனின் சாரநாத் தூண் கல்வெட்டு- பார்வைக்காக



அசோகனின் லும்பினி கல்வெட்டு- பார்வைக்காக




அசோகன்  -  பிராமி 




அசோகனின் உருவப்படம்





துணையாக  நின்றவை:



     CORPUS INSCRIPTIONUM INDICARUM – Vol-I by A. CUNNINGHAM


      2   தமிழ் - பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.

           முதல் பதிப்பு-2006.



      3   இணையம் - விக்கிபீடியா



துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி :  9444939156.

Thursday, August 11, 2022

சிவபெருமான் வழிபாடு- வரலாற்று காலத்திற்கு முன்பானவை

இந்தியா முழுவதும் நாம் பரவலாக சிவபெருமான் வழிபாடு கோவில்கள் காணலாம். சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு தெளிவாக உள்ளது. இவை எல்லாம் வரலாற்று காலத்தில் எழுந்தவை. வேதங்கள் 4000 ஆண்டு தொன்மையானவை அவடற்றிலும் சிவ வழிபாடு உள்ளது. நாம் தற்போது வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் சிவ வழிபாடு எனத் தொல்லியலாளர் அகழாய்வுகளில் கண்டவை காண்போம்

இந்த பாறை வசிப்பிடங்களை கண்டுபிடித்து, உள்ள ஓவியங்களை எல்லாம் ஆவணப் ப‌டுத்திய தொல்லியல் அறிஞர் வி.எஸ்.வாலங்கர். 

பீம்படுகா பாறை வசிப்பிடங்கள் என மத்தியப்பிரதேச  1 லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்தது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகைப் பாறைகளில் தங்கள் வாழ்வினை வெண்/சிவப்பு சாந்து கொண்டு வரைந்த கோடு படங்களில் மிகப் பழமையானவை 30,000 ஆண்டுகள் தொடங்கி பொஆ.முதல் நூற்றாண்டு வரை என அறிஞர்கள் கணித்து உள்ளனர்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka rock shelters: தேவநாகரி: भीमबेटका पाषाण आश्रय) என்பவை மத்திய பிரதேச மாநிலத்தில் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் மற்றும் உலகப் பாரம்பரியக் களமுமாகும்.

 

பீம்பேட்கா பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன.இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால(பாலியோலித்திக் காலம்) பாறை ஓவியங்களும் கண்டறியப் பட்டுள்ளன.

 

பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர். 


The first archaeologist to visit a few caves at the site and discover its prehistoric significance was V. S. Wakankar, who saw these rock formations and thought these were similar to those he had seen in Spain and France. He visited the area with a team of archaeologists and reported several prehistoric rock shelters in 1957.

It was only in the 1970s that the scale and true significance of the Bhimbetka rock shelters was discovered and reported. Since then, more than 750 rock shelters have been identified. The Bhimbetka group contains 243 of these, while the Lakha Juar group nearby has 178 shelters. According to Archaeological Survey of India, the evidence suggests that there has been a continuous human settlement here from the Stone Age through the late Acheulian to the late Mesolithic until the 2nd century BCE in these caves. This is based on excavations at the site, the discovered artifacts and wares, pigments in deposits, as well as the rock paintings.


 





Pre-historic art[edit]

Scholars have interpreted early prehistoric paintings at the Bhimbetka rock shelters, considered to be from pre-10,000 BCE period,[61] as Shiva dancing, Shiva's trident, and his mount Nandi.[62] Rock paintings from Bhimbetka, depicting a figure with a trident or trishul, have been described as Nataraja by Erwin Neumayer, who dates them to the mesolithic.[63][b]

  1.  Klostermaier 2007, pp. 24–25: "... prehistoric cave paintings at Bhimbetka (from ca. 100,000 to ca. 10,000 BCE) which were discovered only in 1967..."
Klostermaier, Klaus K. (2007). A Survey of Hinduism, 3rd Edition. State University of University Press. ISBN 978-0-7914-7082-4
  1. ^ Javid 2008, pp. 20–21; Mathpal 1984, p. 220; Rajarajan 1996.
Javid, Ali (January 2008). World Heritage Monuments and Related Edifices in India. Algora Publishing. ISBN 978-0-87586-484-6.

  1. ^ Neumayer 2013, p. 104.
https://www.harappa.com/blog/male-dancer-harappa

சிவபெருமான் வழிபாடு, லிங்க ரூபமாக பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்வது, நாம் அவற்றை தொல்லியல் தரவுகளோடு காண்போம்

சிந்து-சரஸ்வதி நதி நாகரீகத்தில் முதலில் கிடைத்தவை 3தலை, மாட்டுக் கொம்புகளோடு சுற்றிலும் மிருகங்கள் என உள்ள முத்திரை சிவ- ருத்ரரின் தொடக்க வடிவம் என பசுபதி முத்திரை எனப் பெயர் தரப்பட்டது.
from Harappa Galary - National Museum, Delhi.
சர்.ஜான் மார்ஷல் பசுபதி முத்திரை, மற்றும் பல நூறு மிகச் சிறிய லிங்கங்கள் என அறிவித்ததை தற்போது பெரும்பாலான அறிஞர்கள் ஏற்கவில்லை. 
மேலே ஹரப்பா லிங்கம் ஒன்றும் பிறகு காளிபங்கனில் கிடைத்த 4.5 இன்ச் லிங்கம் மட்டுமே ஓரளவு இருக்கலாம் என சிலர் ஏற்பதே இன்றைய நிலை. சங்க இலக்கியம் கூறும் யாகசாலை அமைப்பு என்பதும் அறிஞர்கள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை.
பீம்பேடுகா பாறை குகை வாழ்விடங்கள்

பிடா  சுடுமண் பஞ்சமுக லிங்கம் 

மத்திய பிரதேச மாநிலத்தில் பிடா எனும் இடத்தில் கிடைத்த சுடுமண் பஞ்சமுக லிங்கம் பொமு.100 வாக்கிலானது என சிந்துவெளி அகழ்வு செய்த R.D.பானர்ஜி கல்வெட்டு ஆதாரங்கள் கொண்டு குறித்தார்.
This is clearly a panchamukhalinga, depicting the five faces of Shiva, which are Isana, Tatpurusha, Aghora, Vamadeva, and Sadyojata. There is an inscription at the base and from a study of which based on the used characters, RD Banerji placed the linga to be of the 1st c. BCE. (This is now housed in the Lucknow museum).
சுங்க அரச வம்சம் கால கற்பலகை பொமு.100 வாக்கிலானது- மரத்தடியில் சிவலிங்கம் வழிபாடு.
பஞ்சாப் அருகே பொமு 2ம் நூற்றாண்டு கால காசில் கோவில் மற்றும் திரிசூலம் உள்ளது.
பழைய உஜ்ஜயினி காசில் சிவபெருமான் கையில் கமண்டலம், பொமு 2ம் நூற்றாண்டு Ujjain city state c. 2nd century BC AE coin (15 mm, 2.17 g)
Obverse: Male deity Mahakal (Siva) standing right, holding Kamamdal; tree-in-railing to left Reverse: 4-orbed Ujjain symbol Ref: Pieper 281
https://www.vcoins.com/en/stores/ganga_numismatics/216/product/india_ujjain_copper_coin_with_shiva_standing_right_rare/1257900/Default.aspx


  
Ekamukha linga. Mathura. 1st cent. CE Excavated In Bhita Village Mathura Museum.
2000 Years Old Shiva Linga Kushana Period

Uttar Pradesh, Mathura, 1st century CE , India. Sandstone , Philadelphia Museum of Art
குஷான வம்சத்தில் பொஆ 1ம் நூற்றாண்டு ஆரம்பம் முதலாக முகலிங்க அமைப்பு வளர்ந்தது. அதன் அழகான வடிவம் ஆந்திரா திருப்பதி அருகில் குடிமல்லம் சிவலிங்கம் ஆகும்
Chaturmukha linga with a decorative band, Kushana era. National Museum, Delhi.
 

தலா தேவ்ராணி- ஜெதானி கோயில், சட்டிஸ்கர் மாறுபாடான‌ ருத்ர சிவமூர்த்தி திருவுருவம்!!! 

பழைய உஜ்ஜயினி காசில் சிவபெருமான் கையில் கமண்டலம், பொமு 2ம் நூற்றாண்டு Ujjain city state c. 2nd century BC AE coin (15 mm, 2.17 g)
Obverse: Male deity Mahakal (Siva) standing right, holding Kamamdal; tree-in-railing to left Reverse: 4-orbed Ujjain symbol Ref: Pieper 281
https://www.vcoins.com/.../india.../1257900/Default.aspx


பொயுமு187- இல் மௌர்ய பேரரசின் வலிமையற்ற வேந்தனான ப்ரஹத்ரதனைக் கொன்று விட்டு தளபதியாக இருந்த புஷ்யமித்ரன் அரசனான். இவனில் துவங்கிய சுங்க வம்சம் அந்தப் பேரரசை நூற்றுப்பத்து ஆண்டுகள் நடாத்தியது. மௌர்யர்கள் பரப்பியிருந்த பௌத்தத்தை நீக்கிய செயல் இவர்களுடையதே. புஷ்யமித்ரனின் மகனான அக்னிமித்ரனே காளிதாஸனால் தனது மாளவிகாக்னிமித்ரத்தில் கொண்டாடப்பெற்றவன். இவர்கள் காலத்தில் பலவிதமான வழிபாடு தொடர்பான கற்பலகைகள் கிடைக்கின்றன. மதுராவில் கிடைத்த இந்த இரண்டு கற்பலகைகளும் மிக இன்றியமையாதவை. ஒரு பலகையில் லிங்க வழிபாடு தெற்றென விளக்கப்பெற்றிருக்கிறது. கின்னரர்கள் இருபுறமும் மாலையேந்தி நிற்க நடுவே மரத்தடியில் சிவலிங்கமானது வீற்றிருக்கிறது. மற்றொரு கற்பலகையில் ஏகமுக லிங்கமானது வீற்றிருக்கிறது. இதுவும் மரத்தடித் திண்ணையில் வீற்றிருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இவையிரண்டும் பொதுயுகத்திற்கு முன்பு லிங்க வழிபாடு எப்படியிருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக அமைந்துள்ளன.


அரப்பாவிற் கிடைத்துள்ள ஆண்சிலையொன்று இடது காலைத்துக்கி வலது காலையூன்றி நின்று நடம்புரியும் நிலையிற் காணப்படுகின்றது. இதனைச் சிவபெருமானுக் குரிய திருவுருவங்களில் ஒன்றான நடராசர் திருவுருவின் முதலுருவமாகக் கருதுவர் ஆராய்ச்சியாளர்.

சிவன் தலையாய யோகிமட்டும் அல்லர்; விலங்குகட்கெல்லாம் தலைவர் (பசுபதி); சிவனுக்குரிய இவ்வியல்பினையே சிவனைச் சுற்றி யானை புலி காண்டாமிருகம், எருது என்னும் நான்கு விலங்குகள் நிற்கும் தோற்றம் காட்டுகின்றது. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள் பிற்காலத்திற் சிவனது சிறப்புத் திருவுருவம் ஒன்றைக் குறிக்கும் நிலையில் மூவிலைச் சூலமாக மாறியது. இவற்றையெல்லாம் நோக்கும்போது பிற்காலத்திலே சிவனுக்கு அமைந்த பல அமைப்புக்களின் தோற்றநிலைகளே சிந்து வெளி முத்திரைகளிற் காணப்படுகின்றன என நாம் கருதலாம்”.


யௌதேயர்கள் சிற்றரசர்களானாலும் தம்மை அசைத்துப் பார்த்த குஷாணர்களையே கலகலக்கச் செய்தவர்கள். அவர்தம் காசுகளில் கார்த்திகேயன் வீற்றிருந்த எழிலைப் பார்த்தோம். இந்தக் காசு கார்த்திகேயனின் ஆலயத்தைத் தனக்குள்ளே கொண்டுள்ளது. முன்னர் மானை வைத்து ஆலயம் எழுப்பியிருக்கிறார்கள். மானைக் கார்த்திகேயனுக்கு வாஹனமாகிய நிறுத்திய காரணம் தெரியவில்லை. ஆனால் பழைய காசுகளில் கார்த்திகேயனுக்கும் திருமகளுக்கும் அருகே மானை வைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இதன் காலம் பொயு ஒன்று முதல் இரண்டாகத் தீர்மானிக்கப்பெற்றுள்ளது.

சிந்துவெளி மக்கள் கடவுள் வழிபாட்டிற் பயன்படுத்திய திருவுருவம் சிவலிங்கங்களே. அரப்பாவில் மட்டும் சிறியனவும் பெரியனவுமாக ஏறக்குறைய ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. சிறிய சிவலிங்கங்களை அக்கால மக்கள் இக்காலத்து வீர சைவர்களைப்போன்று தங்கள் கழுத்திலும் கையிலும் கட்டிக்கொண்டிருத்தல் கூடும். இதனால் சைவ சமயத்திற்கேயுரிய சிவலிங்க வழிபாடு ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் சிந்து வெளியிற் சிறந்து விளங்கியதெனபது நன்கு துணியப்படுதல் காணலாம்.


 
மேலே கண்ட தரவுகளை அந்தந்த துறையில் உச்சத்தில் போற்றப்படும் அறிஞர்கள் இவற்றை கூறினாலும் இன்றைய அறிஞர்கள் சிலபலர் இவை நிச்சயமாக கூற இயலாத கருத்துக்கள் எனக் கூறுகின்றனர்





 




ஆந்திர மாநிலத்தில் கர்னூலை அடுத்த வீரபுரத்தில் கிடைத்த இந்த விநாயகரே மிகவும் பழமையான விநாயகர். சுடுமண்ணால் ஆன இந்த வடிவம் ஐராவதம் மஹாதேவன் அவர்களால் கண்டெடுக்கப்பெற்றது. சாதவாஹனர்களின் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பெறும் இதன் காலம் பொயுமு இரண்டாகலாம் என்று கருதப்பெறுகிறது. பொயுமு இரண்டிலேயே ஆந்திரத்தில் வழிபாடு இருப்பதால் தமிழகத்திலும் இருந்திருக்கலாமென்பதே பலரின் கருத்து..





  




A Bronze Seal of first Century CE was unearthed in 1914-15 by Marshall on the Sirkap site of Ancient Taxila in Punjab of Pakistan which contained the figure of Shiva with two arms with a bilingual legend in Brahmi and Karoshti scripts as "SHIVARAKSHITASA". This seal shows a Club being held in right hand in a knotted pattern as seen for Heracles. Maues ( 60-50 BCE ) is the earliest of Pre Kushana rulers who had adapted this in his Square Copper coins where Shiva holding the Trident and Club are shown. It is said that in a variant Coin by Maues we can also see a Dwarf trampled under the feet of Shiva. Unfortunately I could not source images of these coins as they are very rare but documented, in British Museum, not on public display. In the same pattern Shiva with a Trishula is being shown in the coins of Gondophares ( 30-15 BCE ) with a Palm tree being held in an extended right hand. Posture seen in Sirkap Seal is different from that seen in Gondophares and Vima Khadphises coins; the left leg is placed similarly in all, whereas the right leg with bent knee is stretched forward in the Seal. The Indo Greek coins showing Heracles with a club are of the same pattern of the Club element. The Indian loin cloth and Turban on the head are starkly in contrast with the Shiva figure shown in a Hellenistic Style. Bronze seal No.12 unearthed at Sirkap, Taxila, was described by Marshall in ASI Archaeological Review 1914-15 ( Page 15, Pl. XXIV, 50 ) as Heracles trampling a bull shaped Dragon. The Kharoshti legend was read by him as Tidusa Vibhumitrasa while Konow read it as Badusa Vispamitrasa translated as "Of the Young Brahman Visvamitra". This probably depicts Shiva as Vishwamitra, the name of the person in this Seal being after the name of the God depicted. The Bull below the left leg of the main figure is significant. These names are frequently also seen as various forms of Shiva ( on some silver coins of Audumbara Chief Dharaghosha ) and one of his aspects is well known to us as Vatuka Bhairava. Maues Square coins in British Museum are documented in detail by Gardner, who explains it as a Male figure with Chlamys flying behind, holds a club and Trident. A similar one is also seen in Punjab Museum in a Maues coin with the Male deity striding to left with flowing draperies, holding a club in right hand and long spear or Sceptre in left. The Script Shivarakshitasa means "One Protected by Shiva" and the Coin with this script shows almost exactly the same form of Shiva from other coins, with his Trident held on left hand resting on his left shoulder and a knotted Club in right hand. From these we can infer that in Coinage the first to depict Shiva were indeed the foreign rulers of Ancient India and also evidently earlier to Gondophares. Similarly Cunningahm's "Coins of Indo-Scythians and Kushans" ( Page 30, Pl.II,Fig13) it is explained that a male figure facing front is seen with an elephant goad over the left shoulder. The Ankusa being Shiva's attribute is also seen in Kanishka and Huvishka coins and so it should be Shiva only. Maues coins show only a Trishula in Shiva's hand and sometimes a dwarfish figure being trampled is frequently interpreted as Poseidon. This is also seen in the coins of Antimachus Theos. Obviously in an Indian perspective we cannot help being reminded of the Apasmara Purusha under Shiva's feet.

ருத்ர மூர்த்தி சிவபெருமான் திருவுருவம் மிகவும் அரிதான, வேறெங்கும்  காணக் கிடைக்காத திருவுருவமாக, தேவ்ராணி- ஜெதானி கோயில் வளாகத்தில், தாலிகன் என்னும் கிராமத்தில் உள்ளது.

3 தலைகளுடன் தலையில் கொம்புடன், சுற்றி பல மிருகங்கள் என உள்ள மேலே உள்ள‌சிந்துவெளி பசுபதி முத்திரையை சிவ வடிவத்தின் முந்தையது என்றால் தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல்.  இந்த பிரம்மாண்ட சிலை அதனை விவரிக்கும் ஒரு நாட்டார் வழி ருத்ர சிவா சிற்பம் எனப்பட்டாலும், இந்த சிலை எந்த சிற்ப சாஸ்திர நூலிலும் கூறப்படாதது என்கின்றனர்.
 
ருத்ர சிவன் சிற்பத்தைப் புரிந்துகொள்வது
விலங்கு மற்றும் மனித முகங்களால் செய்யப்பட்ட உடல் உறுப்புகள் இதை ஒரு தனித்துவமான உருவமாக ஆக்குகின்றன. படத்தை கவனமாகப் பாருங்கள், 

coin 

Museum number        1894,0506.92
Description
Gold coin (stater) of Vasudeva I, showing a three-headed deity (Śiva) holding a trident and a diadem, accompanied by a bull. (whole) (whole)
Figure of Vasudeva I standing to left; r. hand over altar. (obverse) (obverse)
Figure of Wesho standing facing; bull behind to left. (reverse) (reverse)
Authority  Ruler: Vasudeva I
Cultures/periods Kushan
Production date 164-200 (circa) (circa)
Production place
Minted in: India (Northwestern)
Asia: South Asia: India
Minted in: Afghanistan
Asia: Afghanistan
Materials gold
Technique carved
Dimensions Diameter: Diameter: 19 millimetres
Weight: Weight: 8.06 grammes
Inscriptions
  • Inscription type: inscription
  • Inscription language: Bactrian
  • Inscription script: Kharoshthi
  • Inscription translation: OESHO
Curator's comments
Blurton 1992:
The early figures of Shiva which show him in purely human form come from northwestern India, the area of ancient Gandhara. Also from northwestern India come coins of the second century AD issued by the kings of the Kushan dynasty; some of them bear the image of a figure who is captioned 'Oesho', a name which philologists still argue over, but…
Bibliographic references